000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வைஷ்ணவி |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சப்தமாதர்களில் ஒருவராக விளங்கும் விஷ்ணுவின் நாயகி வைஷ்ணவி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a புராணங்கள் வைஷ்ணவியை விஷ்ணுவின் பெண் சக்தி என்கின்றன. விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து, கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பாள். இவர் இராஜவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார் என்று பூர்வகாரணாகமம் குறிப்பிடுகிறது. இவரைப் பற்றி விஷ்ணு தர்மோத்திரம், தேவி புராணம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் வைஷ்ணவி பூரிமத்துடன் கூடிய கிரீட மகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் எறிநிலை சக்கரத்தையும், சங்கும் கொண்டு காணப்படுகிறார். நெற்றியில் நெற்றிப்பட்டை விளங்குகிறது. முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் மகர குண்டலங்களும், மார்பில் முப்புரிநூலும், கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும்,சவடியும் கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். மார்பில் குஜபந்தம் என்னும் மார்புக் கச்சை அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட நூலாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a வைஷ்ணவி, அன்னையர் எழுவர், சப்த மாதர், ஏழு கன்னியர், சப்தமாதர் தொகுதி, சப்த மாதர்கள், பேரங்கியூர் திருமூலநாதர் கோயில், பேரங்கியூர், திருமூலநாதர் கோயில், விழுப்புரம், முதலாம் பராந்தகச் சோழன், முற்காலச் சோழர் கலைப்பாணி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a திருமூலநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பேரங்கியூர் |d விழுப்புரம் |f திருவெண்ணெய்நல்லூர் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர் |
914 | : | _ _ |a 11.86065213 |
915 | : | _ _ |a 79.36661839 |
995 | : | _ _ |a TVA_SCL_000497 |
barcode | : | TVA_SCL_000497 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |